எதிரணியை சோர்வடைய செய்வதில் இவரை போல வல்லவர் இல்லை - மனம் திறக்கம் சச்சின் டெண்டுல்கர்!

cricket sachin pujara
By Anupriyamkumaresan Jun 16, 2021 03:03 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

சேத்தேஸ்வர் புஜாரா குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் சேத்தேஸ்வர் புஜாரா, தனது மிதமிஞ்சிய நிதான ஆட்டத்தின் மூலம் எதிரணி பௌலர்களை கடுப்பேற்றும் ஆற்றல் கொண்டவர்.

இவரது ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலும் 30-க்கும் குறைவாகத்தான் இருக்கும். இதனால், அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது பலருக்கு சளிப்பு தட்டும், விறுவிறுப்பு அதிகம் இருக்காது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இவர் பெரும்பாலான நேரங்களில் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டார்.

எதிரணியை சோர்வடைய செய்வதில் இவரை போல வல்லவர் இல்லை - மனம் திறக்கம் சச்சின் டெண்டுல்கர்! | Cricket Player Pujara About Sachin Tendulkar Talk

இதனால், அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனால், புஜாரா கொஞ்சமாவது அடித்து ஆட வேண்டும், அவர் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபடுவதால் ஸ்கோர் உயர்வில் சுணக்க நிலை ஏற்படுகிறது எனப் பலர் விமர்சனங்களை அடுக்கினார்கள்.

தற்போதுவரை இந்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டிகொடுத்த அவர், இந்திய அணிக்காக புஜாரா செய்ததை நாம் உண்மையில் பாராட்ட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஸ்ட்ரைக் ரேட் ஒரு பிரச்சினை இல்லை. ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறதா, ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும்.

புஜாராவும் அப்படிதான். அவர் தனித்துவமானவர் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஒவ்வொரு பந்திலும் சிங்கள் ரொட்டேட் செய்யும் வீரர்கள், புஜாரா அளவுக்குத் திறமை வாய்ந்தவர்கள் எனச் சொல்லவிட முடியாது.

எதிரணியை சோர்வடைய செய்வதில் இவரை போல வல்லவர் இல்லை - மனம் திறக்கம் சச்சின் டெண்டுல்கர்! | Cricket Player Pujara About Sachin Tendulkar Talk

இவரால் பந்து வீச்சாளரைத் திணறடிக்க முடியும். எதிரணியை சோர்வடைய செய்ய புஜாரா போன்றவர்களால் மட்டுமே முடியும். அப்போதுதான், நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடிய ரிஷப் பந்த், ஜடேஜா போன்றவர்களால் அதிரடி காட்ட முடியும்” எனக் கூறினார்.

இப்போது இருக்கும் தலைமுறையினரிடம் டி20 மோகம் அதிகம் இருக்கிறது. இதனால், பந்துகளை சிக்ஸருக்கு விரட்டுபவர்களைத்தான் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்கிறார்கள். இதனால்தான், டெஸ்டில் சிறந்த முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை விமர்சிக்கும் மனநிலை வந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.