ரோஹித்துக்கு எச்சரிக்கை விடுத்த நியூசிலாந்து பௌலர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் விக்கெட்டை வீழ்த்துவேன் என நியூசிலாந்து பௌலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, நாளை துவங்கவுள்ளது.
இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை நான் வீழ்த்துவேன் என நியூசிலாந்து பௌலர் தெரிவித்துள்ளார். டிரன்ட் போல்ட் கூறிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங் கோச் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். டிரான் போல்ட், ரோஹித் ஷர்மா இருவரும் ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதைப் போட்டியின்போது பார்த்திருக்கிறோம். தற்போது இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இவர்கள் ஐபிஎல்லில் பயிற்சியின்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி குறித்துப் பேசிக்கொள்வார்கள் என பாண்ட் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியின்போது ட்ரன்ட் போல்ட் பௌலிங் செய்கையில், பல பந்துகள் ரோஹித்தின் பேடில் பட்டது. அப்போது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இதேபோல்தான் நடக்கும்’ என ரோஹித்திடம் போல்ட் கூறினார்.
நான் பார்த்த வரையில், இறுதிப் போட்டி குறித்து அவர்கள் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் நேருக்கு நேர் மோதுவோம் என அப்போதே அவர்களுக்கு தெரிந்திருந்து எனத் தெரிவித்தார். இதனையடுத்து தற்போது rohit vs boult என்ற ஹேஸ்டெக் ட்ரெண்டாகத் துவங்கியுள்ளது.