டிசம்பரில் நடைப்பெற இருந்த ஐபிஎல் மெகா ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

cricket postponed ipl auction bcci informs
By Swetha Subash Dec 23, 2021 06:57 AM GMT
Report

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் டிசம்பரில் முதலில் நடப்பதாக இருந்தது, இப்போது பிசிசிஐ ஐபிஎல் மெகா ஏலத்தை 2022 பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் இருநாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதான் பிசிசிஐ நடத்தும் கடைசி மெகா ஏலமாக இருக்கும், ஏனெனில் அணி உரிமையாளர்கள் ஐபிஎல் ஏலத்தை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறும்போது,

"கொரோனா சூழ்நிலைகள் மோசமடைந்தாலே தவிர மெகா ஏலம் இந்தியாவில்தான் நடைபெறும், பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

ஓமைக்ரான் வேரியண்ட் அலை அடித்து வருவதால், இந்தியாவில் பெரிய தாக்கம் இல்லை என்றாலும் ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தால் சிக்கலாகி விடும்.

அப்போது ஓவர்சீஸ் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் வந்தாலும் வரலாம் எனவே ஏலத்தை இந்தியாவில் நடத்துவதே உசிதம் என்று உரிமையாளர்கள் கருதுவதாகத் தெரிகிறது.