காயத்துடன் விளையாடிய ரோகித் ஷர்மாவை குறித்து மனைவி உருக்கமான பதிவு...!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Nandhini Dec 08, 2022 06:09 AM GMT
Report

காயத்துடன் விளையாடிய ரோகித் ஷர்மாவை குறித்து மனைவி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா காயம்

நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் வங்காளதேசமும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது. இப்போட்டியின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.

இப்போட்டியில், முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ்ஜானது. அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது.

அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சி செய்த போது, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் ரோஹித் பலத்த காயம் ஏற்பட்டு கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

களத்தில் போராடிய ரோஹித் சர்மா

இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய இந்திய இலக்கை நோக்கி விளையாடியது. இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்த போதும் கடைசி கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார்.

கையில் காயம் ஏற்பட்டபோதிலும், வலியைத் தாங்கிக்கொண்டு ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். ஆனாலும், இந்திய அணிக்கு கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரோகித் சர்மா சிக்சர் எடுத்தார். அடுத்த பந்தில் அவரால் ரன் அடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து, 2 ஒரு நாள் போட்டிகளையும் வங்காளதேச அணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

cricket-indian-team-rohit-sharma-wife-ritika

மனைவி உருக்கமான பதிவு

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் மனைவியான ரித்திகாவும் தன் கணவரை குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "ஐ லவ் யூ. மனதில் தோன்றுவதை அப்படியே செய்ய நினைக்கும் உங்களுக்குள் இருக்கும் மனிதனை பார்க்கும் போது நான் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

cricket-indian-team-rohit-sharma-wife-ritika