இந்தியா வெற்றி - சவாலான சூழல்களை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும்.... - பாண்டியா கருத்து...!

Hardik Pandya Cricket Indian Cricket Team
By Nandhini Jan 04, 2023 07:24 AM GMT
Report

சவாலான சூழல்களை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என்று கேப்டன் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் -

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகை தந்துள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை ஹர்திக் பாண்டயா வழி நடத்தி வருகிறார். ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இத்தொடர் அமைய உள்ளது.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

இதனையடுத்து, நேற்று முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

cricket-indian-team-hardik-pandya

கேப்டன் பாண்டியா கருத்து

இந்நிலையில், சவாலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், சவாலான சூழ்நிலைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். பெரிய ஆட்டங்களில் அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா வலுவாக உள்ள இருதரப்பு ஆட்டங்களில், முடிந்தவரை சவால்களை எதிர்கொண்டால் வீரர்களுக்கு நன்மை என்றார்.