தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ரோகித் சர்மா... - தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை கடுமையாக திட்டினாரா? - ரசிகர்கள் கண்டனம்

Rohit Sharma Cricket Indian Cricket Team Washington Sundar
By Nandhini Dec 05, 2022 08:05 AM GMT
Report

இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்துப் போட்டியின் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் முடிவில், 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபாரமாக வெற்றி பெற்றது.

கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் -

இப்போட்டியில், கே.எல். ராகுல் தவறவிட்ட கேட்ச்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மிஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன் அடிக்க, அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது. ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார்.

அது கேட்ச் நோக்கி சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் வேகமாக ஓடினார். அவர் அந்த பந்தை கேட்சி பிடிக்க முயன்றபோது, பந்து அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.

கேட்சி தவறவிட்டதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்சை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

cricket-indian-rohit-sharma-washington-sundar

வாஷிங்டன் சுந்தரை திட்டினாரா?

இப்போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் கே.எல் ராகுல் கேட்ச்சை தவறவிட்டார். இதனால் கடுப்பான ரோஹித் அவரை முறைத்து பார்த்தபடியே இருந்துக் கெண்டிருந்தார்.

அப்போது, அடுத்த பந்தும் மெஹதி ஹாசன் தூக்கி அடிக்க அது, ஆப் சைடில் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை நோக்கி சென்றது. பந்து வருவதைக்கூட விளக்கு வெளிச்சத்தில் சரியாக கணிக்காத வாஷிங்டன் சுந்தர் பந்தினை கேட்ச் செய்ய முடியாமல், பந்து விழுந்தவுடன் அதை எடுத்து த்ரோ செய்தார்.

அப்போது வாஷிங்டன் சுந்தரை பார்த்து கோபம் அடைந்த கேப்டன் ரோஹித் அவரை நோக்கி சில ஆவேசமான வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இளம் வீரர் சுந்தர் மீது இவ்வளவு கோபத்தை கேப்டன் காண்பிக்க வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.