“எங்க அணியின் பலமே இவங்க தான்” - புஜாரா பேச்சு

cricket test match indian team strength bujaara talks about ahead of
By Swetha Subash Dec 19, 2021 08:36 AM GMT
Report

தென் ஆப்பிரிக்கா நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

வருகிற 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் இந்திய அணியின் பலம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார் அணியின் சீனியர் வீரர் புஜாரா.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று முதல் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எங்களது பலம். அயலக மண்ணில் நாங்கள் கிரிக்கெட் விளையாடியபோது அவர்களது அபாரமான திறனை பந்து வீச்சாளர்கள் வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்களை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை தக்கமைத்துக் கொண்டு இந்திய பவுலர்கள் பந்து வீசி ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அதற்கான வல்லமை அவர்களிடம் உள்ளது' என புஜாரா தெரிவித்துள்ளார்.

இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ், தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி என தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.