வெடித்து சிதறிய பட்டாசு ஆலை...பரிதாபமாக உயிரிழந்த 9 பேர் - முதலமைச்சர்,பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று தீடிரென ஏற்பட்ட வெடி விபத்தால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
மேலும் இந்த விபத்தில் 13க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தில், வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/RB57pPxi8a
— TN DIPR (@TNDIPRNEWS) March 22, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் வெடிவிபத்து குறித்து மிகுந்த வேதனையடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
Pained by the mishap at a firecracker unit in Kancheepuram. Condolences to the bereaved families. May the injured recover soon. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Rs. 50,000 would be given to the injured : PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 22, 2023
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.