தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது- அழுத்தமாக சொன்ன சிபிஎம்

Vijay Tamil nadu TVK
By Vinoja May 29, 2026 05:39 PM GMT
Report

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு, “மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசு ஊசலாட்டம் காட்டக் கூடாது” என வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் குறிப்பிடுகையில், “ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக! ‘ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்’ என்பது சட்ட மேதை அம்பேத்கரின் முக்கியமான கருத்துகளில் ஒன்றாகும்.

தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது- அழுத்தமாக சொன்ன சிபிஎம் | Cpm Cm Vijay There Should Be No Instability

மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த, தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும்.

மாநிலங்களில் ஆட்சி மாறலாம்; ஆனால் மாநில உரிமைகளும் கூட்டாட்சியும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும்.”