மீண்டும் தலைத்தூக்குகிறதா திமுகவினரின் அட்டூழியம்..?

cowlbazar pozhichalur dmkcrime dmkvscommonman
By Swetha Subash Mar 13, 2022 10:56 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கவுல்பசார் ஊராட்சி மன்றத்தில், மாரியம்மன் கோயில் தெருவில் குடும்பத்தோடு வசித்துவருபவர் வடிவேல்.

அண்மையில் கவுல்பசார் ஊராட்சியில் திறந்தவெளி கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தொற்றுபாதிப்புகள் அதிகரித்துவரும் சூழலில் கழிவுநீர் வெளியேற முழுமையான வசதி செய்யாமல்,

கழிவுநீர் கால்வாய் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருந்துவரும் ஊராட்சி தலைவர் திருமதி அனிதா இளங்கோவனின் நிர்வாக இயலாமையை குறித்து அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மீண்டும் தலைத்தூக்குகிறதா திமுகவினரின் அட்டூழியம்..? | Cowl Bazar Dmk Magnate Attacks Pre Teen On Revenge

இந்நிலையில், தங்கள் வீட்டருகே போகும் கால்வாயை முறையாக அமைக்க வேண்டுமென வடிவேல் மற்றும் அவரின் குடும்பத்தினர் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவி திருமதி அனிதாவின் கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளங்கோவன், வடிவேலை அழைத்து கடுமையாக பேசியுள்ளார்.

அத்துடன், அவரது சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

தன்னுடைய சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியதால் பொறுமை இழந்த வடிவேலு, ' இப்படி அசிங்கமா பேசாதீங்க... நாங்களும் படிச்சவங்க தான்... எங்களுக்கும் சுயமரியாத உணர்வு இருக்கு' என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துள்ளார்.

வடிவேலின் பேச்சை கேட்டு மேலும் வன்மம் கொண்ட இளங்கோவன், அவரது வீட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மிரட்டியும் கற்களைக்கொண்டு எறிந்தும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில், திருமதி உமா திருநாவுக்கரசுக்கு தலையில் காயம் ஏற்படவே அவர் கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்து இளங்கோவனும், அவரது ஆதரவாளர்களும் கலைந்து சென்றுள்ளனர்.

ஆனால் திமுக பிரமுகர் இளங்கோவனின் தம்பி ராஜ், வடிவேல் மீதான வன்மத்தை வெளிப்படுத்த அவரது 15 வயதான மகன் கார்த்திகேயன் வெளியில் சென்றபோது அவனை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

மீண்டும் தலைத்தூக்குகிறதா திமுகவினரின் அட்டூழியம்..? | Cowl Bazar Dmk Magnate Attacks Pre Teen On Revenge

சிறுவன் என்றும் பார்க்காமல் கார்த்திக்கேயனை அருகில் இருந்த மெக்கானிக் கடைக்கு அழைத்துச்சென்று கட்டிவைத்து வயரை (wire) வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

மீண்டும் தலைத்தூக்குகிறதா திமுகவினரின் அட்டூழியம்..? | Cowl Bazar Dmk Magnate Attacks Pre Teen On Revenge

கடுமையாக தாக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களோடு அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்து நடந்ததை கூறியுள்ளார். விவரம் அறிந்த வடிவேலின் குடும்பத்தினர் பதறிப்போய் அச்சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மீண்டும் தலைத்தூக்குகிறதா திமுகவினரின் அட்டூழியம்..? | Cowl Bazar Dmk Magnate Attacks Pre Teen On Revenge

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு சென்று புகாரளிக்க உமா முடிவு செய்ய, அதற்குள் அங்கு வந்த சங்கர் நகர் காவல்துறையினர் இது குறித்து வழக்கு எதுவும் பதியாமல் விசாரணை நடத்துவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சாதிவெறியும், அதிகார போதையும் கொண்டு அட்டூழியம் செய்துவரும் திமுக பிரமுகர் இளங்கோவனால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி வேண்டும் என்றும்,

திமுக பிரமுகர் இளங்கோவன், அவரது தம்பி ராஜீ மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வடிவேலு மற்றும் குடும்பத்தினர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.