Tuesday, Jun 24, 2025

பிப்ரவரி 14 “பசுக்களை கட்டியணைக்கும் தினம்” என விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு - காதலர்கள் அதிர்ச்சி

Valentine's day Government Of India
By Thahir 2 years ago
Report

பிப்ரவரி 14 இனி பசுக்களை கட்டியணைக்கும் தினமாக கொண்டாடப்படும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

காதலர் தினம் 

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14 அன்று காதலர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவிப்பது மரபாக இருந்து வருகிறது.அப்போது அவர்கள் வாழ்த்து அட்டை, இனிப்புகள், மலர்கள், ஆகியவற்றை அன்று பரிமாறிக் கொள்கின்றனர்.

"Cow Hug day" on 14th February

வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவ தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளை கொண்டாடுவதால் காதலர் தினம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

தோற்றத்தில் இது மேற்கத்திய உலக கொண்டாடங்களில் ஒன்றாக இருந்தாலும் அண்மைக் காலங்களாக உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

இனி பசுவை கட்டியணைக்கும் தினம் என அறிவிப்பு 

இந்த நிலையில் இனி பிப்ரவரி 14 இனி பசுவை கட்டியணைக்கும் தினமாக கொண்டாடப்படும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புறத்தின் முதுகெலும்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம் பொருளாதாரம், நமது வாழ்வை நிலைநிறுத்துகிறது, கால்நடை செல்வம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை குறிக்கிறது.

"Cow Hug day" on 14th February

இது அறியப்படுகிறது தாயைப் போன்ற ஊட்டமளிக்கும் தன்மையால் "காமதேனு" மற்றும் "கௌமாதா" என, மனிதகுலத்திற்கு அனைத்து செல்வங்களையும் வழங்குபவர். முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரம்.

மேற்கத்திய நாகரிகத்தின் திகைப்பு நம்மை ஆக்கியுள்ளது. உடல் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறந்துவிட்டது. பசுவின் அபரிமிதமான பலனைக் கருத்தில் கொண்டு, பசுவைக் கட்டிப்பிடிப்பது நன்மை தரும் உணர்ச்சி வளம் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

எனவே, அனைத்து பசு பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு கட்டியணைப்பு தினமாக கொண்டாடலாம். தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.