இந்தியாவில் ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா பாதிப்பு -எவ்வுளவு தெரியுமா?

coronavirus Coronavirus IndiaCOVID19
By Irumporai Apr 15, 2021 04:39 AM GMT
Report

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொர்று அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெலியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,00,739 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93,528 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 உள்ளது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது புதிதாக 1,038 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,73,123-ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்தியாவில் இதுவரை 11,44,93,238 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.