அதிகரிக்க தொடங்கிய கொரோனா..மூன்றாம் அலை தொடங்கியதா?

Corona Covid19 Chennai
By Thahir Aug 02, 2021 09:26 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.17 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

அதிகரிக்க தொடங்கிய கொரோனா..மூன்றாம் அலை தொடங்கியதா? | Covid19 Corona Tamilnadu Chennai

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,957 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,099 பேர் ஆண்கள், 858 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 63ஆயிரத்து 544ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 385ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் 280 பரிசோதனை மையங்கள் உள்ளன. 28பேர் உயிரிழந்துள்ளார். 5பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 23பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 130ஆக அதிகரித்துள்ளது.

நேற்று  2,068 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 09 ஆயிரத்து 029ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.