கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது : வுஹான் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

COVID-19 China
By Irumporai Dec 05, 2022 09:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்' என்ற திடுக்கிடும் தகவலை சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் அமைந்துள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்' பணியாற்றிய முக்கிய ஆராய்ச்சியாளர்களில்  ஒருவர் ஆவார்.

இந்த நிலையில், விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எழுதிய "வுஹான் பற்றிய உண்மை" என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது : வுஹான் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் | Covid Was Man Made Virus Says Wuhan

அதில் , வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்குநடத்தப்பட்டன.

அமெரிக்க அரசாங்கமே காரணம்

இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம். இத்தகைய ஆபத்தான 'உயிரி தொழில்நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம்.

உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம்(பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம்.  கொரோனா வைரஸ் 'மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது' என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விஷயமே என விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தெரிவித்தார்.