ஒலிம்பிக் போட்டிகள் தொடர்வதில் சிக்கல்: சாதனை படைக்கும் கொரோனா
டோக்கியோவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்தாண்டு நடக்கவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு ரசிகர்கள் இன்றி மிகுந்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி உள்ள வீரர்கள் மற்றும் தொடரில் பங்கேற்க கூடியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே டோக்கியோ நகரில் நேற்று ஒரே நாளில் 3,177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகளில் அதிகளவில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகரிக்கும் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.