தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,63,544 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,130 ஆக உள்ளது. மேலும் 2,068 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,09,029 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 219 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 168 பேருக்கும், சேலத்தில் 91 பேருக்கும், தஞ்சாவூரில் 123 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.