ஆக்.25 வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்

V. Senthil Balaji DMK Madras High Court
By Karthick Aug 12, 2023 09:46 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,அதனை மறுத்த நீதிபதி செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளார்.

செந்தில் பாலாஜி

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை விசாரணை செய்யலாம் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக அமலாக்கத்துறை சென்னை சாஸ்திரி பவனில் வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தது.

ஆக். 25 வரை நீதிமன்ற காவல்  

தற்போது அவர் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்க கூடுதலாக விசாரிக்க 5 நாட்கள் அவகாசம் கோரி மனு அளித்தது.

court-custody-extended-for-senthil-balaji

இந்நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி, வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றார்.