ஒடுக்கப்பட்ட மக்களோட நம்பிகையாகவும் தைரியமாகவும் நான் இருப்பேன்: ஹாக்கி வீராங்கனை வந்தனா!

Vandana Katariya hockeyplayer
By Irumporai Aug 06, 2021 07:16 AM GMT
Report

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாகவும் தைரியமாகவும் தாம் இருப்பதாக தனது சாதியை குறிப்பிட்டு அவதூறு செய்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை பெற்ற உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா. அரையுறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தப்போது ஆதிக்க சமூகத்தினர் இருவர் ஹாக்கி வீராங்கனை வந்தானவின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து வந்தனாவின் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசி அவமரியாதை செய்துள்ளனர்.

மேலும், பட்டியலினத்தவர்கள் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றதால் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததாக அவர்கள் கோஷமிட்டதாக கூறப்படடதால் கோஷமிட்ட அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹாக்கி வீராங்கனையினை சாதிய ரீதியாக பேசிய விவகாரம் பெரும் பேசு பொருளானது இந்த நிகழ்விற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்திற்கு இதற்கு பதிலடி கொடுத்துள்ள வந்தனா, தனது ட்விட்டர் பதிவில் :

புத்தரின் ஞானமும் அம்பேத்கரின் நிலைத்தன்மையும், கான்ஷிராமின் உறுதியும் என்னுள் இருக்கிறது. நான் தலித் ஆக இருப்பதில் பெருமை அடைகிறேன் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிகையாகவும், தைரியமாகவும் இருப்பதாக வீராங்கனை வந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

[