மறக்க முடியல.. தனிமையில் திருமணம் மீறிய உறவில் ஜோடி - இறுதியில் அதிர்ச்சி
திருமணமான கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கேரளா, விதுரா கிராமத்தில் விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் இவர்களது ரூம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் ரூம் அறையை நீண்ட தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்தனர்.
ஜோடி தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த இளைஞர் மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28). இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு(31) என்பதும் தெரியவந்தது.
இருவரும் காதலர்கள் என்பதும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால், வீட்டை வீட்டு வெளியேறினர். மேலும் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது.