உடலுறவின் போது ஏற்பட்ட நரம்பு முறிவு - உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதியினர்!

Chennai Crime
By Thahir Jun 04, 2022 06:37 AM GMT
Report
290 Shares

சென்னையில் திருமணமான ஆறே மாதங்களில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்(22). மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார்.

இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி(20), என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

உடலுறவின் போது ஏற்பட்ட நரம்பு முறிவு - உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதியினர்! | Couple Commit Suicide Due To Health Reason

இந்நிலையில் நேற்று இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை கடையும் திறக்கவில்லை, வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து கதவை தட்டியும் திறக்காததால் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் உயிரை மாய்த்துகொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதமும் இல்லை என எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை ஏதும் அணுகாமல் இருந்து வந்ததாகவும் தங்களுக்கு குழந்தை பிறக்காது என முடிவு மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.