குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை: நாடு முழுவதும் சிபிஐ சோதனை
குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சனிக்கிழமை நாடு முழுவதும் பெரிய அளவிலான சோதனை ஒன்றில் ஈடுபட்டது.
ஆபரேஷன் மேக்சக்ரா
ஆபரேஷன் மேக்சக்ரா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 56 இடங்களில் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் தமிழகத்தில் சென்னை, கடலூர், திண்டுக்கல் உட்பட 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 59 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
இதுகுறித்து சிபிஐ நேற்று வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவிறக்கம், பகிர்தல் தொடர்பாக ‘ஆபரேஷன் மெகா சக்ரா என்ற பெயரில்’ 21 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
59 இடங்களில் சோதனை
சிங்கப்பூரின் இன்டர்போலில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (சிஏசி) பிரிவு மற்றும் நியூசிலாந்தின் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐடி சட்டத்தின் கீழ் சிபிஐ 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
சோதனை நடந்த இடங்கள்
1. உத்தரகாண்ட் டேராடூன்
2. குஜராத் கச், ராஜ்கோட், லுனாவாடா, கோத்ரா
3. உத்தர பிரதேசம் காசியாபாத், ஹத்ராஸ், மகாராஜ்கன்
4. மேற்கு வங்கம் முர்சிதாபாத், பர்த்மான்
5. மகாராஷ்டிரா மும்பை, புனே, நாசிக், தானே, நாந்தேட், சோலாப்பூர், கோலாப்பூர், நாக்பூர்
6. ஜார்கண்ட் ராஞ்சி, தன்பாத்
7. ஆந்திரா சித்தூர், கிருஷ்ணா
8. கர்நாடகா ராம் நகர், கோலார், பெங்களூரு, குடகு
9. அரியானா பரிதாபாத்
10. சட்டீஸ்கர் ராய்பூர்
11. கேரளா செலக்கரா, மல்லாபுரம்
12. தமிழ்நாடு சென்னை, திண்டுக்கல், கடலூர்
13. பஞ்சாப் குர்தாஸ்பூர், ஹோசியார்பூர்
14. தெலங்கானா ஐதராபாத்
15. ராஜஸ்தான் அஜ்மீர்; ஜெய்ப்பூர்
16. அசாம் கவுகாத்தி, திமாஜி
17. அருணாச்சல் இடாநகர்
18. பீகார் அரன், பாகல்பூர்
19. திரிபுரா அகர்தலா
20. இமாச்சல் மண்டி
21. கோவா, டெல்லி யூனியன் பிரதேசம்