உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் - சீமான்

Udhayanidhi Stalin Naam tamilar kachchi DMK Seeman
By Thahir Nov 28, 2022 08:03 AM GMT
Report

உதயநிதி அமைச்சரானால் நாமே தலைகீழாக மாறிவிடும் என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

நாடே தலைகீழாக மாறிவிடும்

சேலத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

country will change if Udhayanidhi becomes the minister

அப்போது செய்தியாளர்கள் உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்

மேலும், அதிமுக பாஜக ஆளுமைக்குள் இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்றும், நாட்டிலேயே பெரிய கட்சி எனக் கூறப்படும் பாஜக ஏன் தேர்தலில் தனியாக போட்டியிட முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாதமொரு முறை மின்கட்டணம் எனக் கூறிய அரசு தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.