பாஜகவிற்கு countdown ஆரம்பமாகிடுச்சு...I.N.D.I.A கூட்டத்தில் முக ஸ்டாலின்..!!
தனி தனி கட்சி என்ற போதிலும் நாட்டின் நலனுக்காக இங்கு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது என குறிப்பிட்டு, பாஜகவிற்கு countdown ஆகிவிட்டது என முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
முக ஸ்டாலின் உரை
மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், பாட்னாவில் 19 கட்சிகளுடன் முதல் கூட்டம் நடைபெற்றது, அதை தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைத்து தற்போது மூன்றாவது கூட்டணியில் 28 கட்சிகளை சேர்த்து வலிமைமிக்க கூட்டணியாக இதனை காண்பித்திருக்கிறோம் என கூறினார்.
சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் பாஜகவை சேர்ந்த பிரதமர் மோடி எங்கு சென்றாலும், 9 ஆண்டுகால ஆட்சியை குறித்து பேசாமல், இந்தியா கூட்டணியை பற்றிய அவர் பேசி வரும் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
Countdown துவங்கி விட்டது
பாஜகவின் ஆட்சி unpopular ஆகும் நிலையில், இந்தியா கூட்டணி popular ஆவதாக குறிப்பிட்ட அவர், பாஜகவின் ஆட்சிக்கு countdown துவங்கி விட்டதாக தெரிவித்தார். இதுவரை இல்லாத சர்வாதிகார ஆட்சியாக பாஜக ஆட்சி இருப்பதாக குற்றம்சாட்டிய முக ஸ்டாலின், CAG'யின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க முடியாமல் பிரதமர் வாய் திறந்து பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல், தேர்தல் ஆணையத்திற்கு சுதந்திரமில்லாமல், அரசு அமைப்புகளை ஏவல் அமைப்புகளாக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். தனி தனி கட்சி என்ற போதிலும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்துள்ளோம் என கூறி, ஒரு பெரிய போர்க்களத்தில் ஈடுபட போகிறோம் அதற்கு அனைவரும் தங்களுக்கு பக்கபலமாக துணை நிற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.