அமைதி பேரணியில் பங்கேற்ற கவுன்சிலர் மயங்கி விழுந்து மரணம்
கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதி பேரணியில், பங்கேற்ற திமுகவின் கவுன்சிலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அமைதி பேரணி
கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உட்பட கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும், பல முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
கவுன்சிலர் உயிரிழப்பு
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் மைதானத்தில் துவங்கிய இந்த பேரணி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முடிவடைந்தது.
இதில், திமுகவை சேர்ந்த சென்னை 146-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகமும் பங்கெடுத்து கொண்டார். பேரணியில் பங்கேற்று வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போதிலும், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.