ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 20, 2022 12:24 PM GMT
Report

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் 

அதிமுக ஆட்சியின் போது சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் சென்னை தி. நகரில் மேற்கொண்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

M K Stalin

இந்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.