"கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது" - உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஜெனிவாவில் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றும், ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒமைக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் ஆனால் இது லேசான நோய் என்று சொல்லி தவறாக வழிநடத்தப்படுகிறது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது, உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது . பலர் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.