இந்தியாவில் ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி 3 மடங்காக உயர்வு
vaccine
corona
redmisiver
By Praveen
இந்தியாவில் ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 3 மடங்கு உயர்த்தப்பட்டு, மாதத்திற்கு ஒரு கோடியே 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத்துறை இணை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வரை நாட்டில் 20 ஆலைகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த அந்த மருந்து, தற்போது 57 ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.