தடுப்பூசி போட்டதால் மரணமா? மக்களுக்கு தெளிவுப்படுத்துக- தொல்.திருமாவளவன்

heart attack vivek thirumavalavan vivek death
By Fathima Apr 17, 2021 03:06 AM GMT
Report

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

அவரது மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக தமிழர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தடுப்பூசியின் விளைவு தான் காரணம் என மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனையும் விளக்கமளித்தாலும் ஐயப்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், #நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.

தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.