மாராடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா ? - விளக்கம் கொடுத்த மத்திய அரசு

COVID-19 COVID-19 Vaccine
By Irumporai Mar 17, 2023 10:06 AM GMT
Report

மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரத்துறை மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

  கொரோனா பரவல்

கொரோனா பரவலுக்கு பிறகு நாட்டில் மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில் இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிதான் என செய்திகள் வெளியாகின , ஆகவே கொரோனா தடுப்பூசிதான் தற்போதைய மாரடைப்பு அதிகரித்தமைக்கு காரணமா என நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தள எம்பி ராஜூவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.

 மாரடைப்பு பதில் :

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துபூர்வ பதிலலித்துள்ளார் அதில் , கொரோனாவுக்கு பிறகுதான் மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு எந்த வித அறிவியல்பூரவ உண்மையும் இல்லை என கூறியுள்ளர்.

தடுப்பூசி காரணமல்ல

மேலும், மாரடைப்பு ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல எனவும் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.