தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா: 15 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!
covid19
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,625 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இன்று மட்டும் 13,625 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.