கொரோனா மூன்றாம் அலை அபாயம்! - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

covid19 india tamilnadu corona3wave
By Irumporai Jun 15, 2021 10:08 AM GMT
Report

கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி டீன்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவ கல்லூரி இயக்குனர்:

கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என வல்லுனர்கள் எச்சரிப்பதால் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 100 படுக்கைகளை கூடுதலாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.