இன்று தமிழகத்தில் 1,562 பேருக்கு கொரோனா

corona tamilnadu
By Irumporai Sep 02, 2021 01:36 PM GMT
Report

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,562 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 890 பேர் ஆண்கள், 672 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 17 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 478 ஆக குறைந்துள்ளது.

இன்று தமிழகத்தில்  1,562 பேருக்கு கொரோனா | Corona Tamilnadu Today

தமிழகத்தில் 288 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 20 பேர் உயிரிழந்துள்ளார். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 961ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,684பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 66 ஆயிரத்து 504ஆக அதிகரித்துள்ளது.