தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி மேலும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 23,310பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 167பேர் உயிரிழந்து உள்ளனர். 20,062பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,55,382மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 23,310பேருக்கு கொரோனா உறுதியானது.
அதில்,24பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங் களை சேர்ந்தவர்கள், 23,286பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,72,602ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,33,93,857மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.இன்று கொரோனா உறுதியானவர்களில் 13,671பேர் ஆண்கள், 9,639பேர் பெண்கள்.
இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,67,616ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,04,948ஆகவும் அதிகரித்து உள்ளது.20,062பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக உயர்ந்தது.நேற்று மட்டும் 167பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
அதில்,73பேர் தனியார் மருத்துவமனையிலும், 94பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,779 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மாவட்ட வாரியாக விபரம்