கொரோனா ஊரடங்கில் சாலையை சீரமைத்து அசத்திய சமூக ஆர்வலர்

corona road social reacreate
By Praveen Apr 25, 2021 11:25 AM GMT
Report

ஊரடங்தில் சாலையை சீரமைத்து அசத்திய சமூக ஆர்வலர்.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில் பலரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கை சாதகமாகக் கொண்டு ஆக்கப்பூர்வமாக ஒரு சிலர் சேவையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை நகரில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டு முழுமை பெறாத நிலையில் சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்க படாமல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள், பாதசாரிகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை நகராட்சியிடம் பலமுறை வழியுருத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்ற நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக ஆர்வலர் துரைச்சாமி.

தனது இல்லம் அருகே உள்ள பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் ஜல்லி, மணல், சிமென்ட் கொண்டு சீரமைத்து அப்பகுதி மக்களிடம் பாராட்டைப் பெற்றார். கொரானா ஊரடங்கு காலங்களில் கிடைக்கும் வாய்ப் பயன்படுத்தி சோதனைகளை சாதனைகளாக மாற்ற பலரும் முயற்சிக மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கொரோனா ஊரடங்கில் சாலையை சீரமைத்து அசத்திய சமூக ஆர்வலர் | Corona Social Recreate Road