உடல்களை அடக்கம் செய்ய மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகளவில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி நிக்கோல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவி டினா ஆகிய இருவரும் செய்து வருகின்றனர். தினமும் 5 மணி நேரத்திற்கு மேல் உடல்களை அடக்கம் செய்திடும் பணியில் இவர்கள் சேவை உணர்வோடு தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், கொரோனா போன்ற நோய் தொற்றுக் காலத்தில் வீட்டில் வெறுமையாக உட்கார்ந்துகொண்டு இருப்பதைவிட மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லா இடத்திலும் ஆபத்து இருக்கிறது. அதற்காக கொரோனா போன்ற நோய் தொற்றுக் காலத்தில் அமைதியாக இருக்கக் கூடாது என்றனர்.