கொரோனா நிவாரண நிதி: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், ஜெயம் ரவி 10 லட்சம்
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கினார்.
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முக்கிய பிரமுகர்கள் சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து நிதியளித்தனர்.
HERO- Apt title for Tamil star Sivakarthikeyan . Donated 25 lakh to CM relief fund today. @Siva_Kartikeyan 👏👏👏👏 Kudos. pic.twitter.com/MoXeqCxAhW
— Kasturi Shankar (@KasthuriShankar) May 15, 2021
அந்தவகையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், ஜெயம் ரவி ரூ.10 லட்சம், இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் வழங்கினர்.