தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா!

corona tamilnadu
By Irumporai May 26, 2021 02:51 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 4,268, சென்னையில் 3,561 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 475 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 21,340 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 29,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,13,221 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 3,10,224 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.