தெருவில் வந்து மிரட்டிய கொரோனா நோயாளி .. தெறித்து ஓடிய பொதுமக்கள்... காவல்துறையின் வித்யாசமான விழிப்புணர்வு!
police
coronapatient
publicawareness
By Irumporai
தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது,
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகம் மக்கள் கூடும் இடமான நாயுடுபுரம் பகுதியில் .
கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் கொரோனா நோயாளி தப்பி ஓடி வந்தது போன்றுகொரோனா விழிப்புணர்வு பற்றிய நாடகம் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டது .
காவல் துறையினர் நடத்திய கொரோனா பற்றிய நாடகத்தில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால் காவல் துறையினர் இது கொரோனா விழிப்புணர்வு நாடகம் என்று முடிவில் தெரிவித்தனர்.
இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்,இதனால் நாயுடுபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.