"கொரோனவை விட தாங்கள் தான் புத்திசாலி என நினைக்கவேண்டாம்" - கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர்

corona death noteasy ratio
By Praveen Apr 22, 2021 07:00 PM GMT
Report

கொரோனாவை யாரும் மிகவும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கொரோனா தடுப்பு குழு மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3789 பேர் சென்னைவாசிகள். இன்று ஒரே நாளில் 1,13,144 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. 7526 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 59 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

தமிழகத்தில் 10,37,711பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 13,317 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரசை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டது.

மேலும் தற்போதைய சூழலுக்கு மக்கள் அனைவரும் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.