தடுப்பூசி வீணாவதை குறைத்த கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரளா அரசு எடுத்து வரும் முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருந்தார்.அதில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் தடுப்பூசிகள் வீணாவதை குறைப்பது முக்கியம் என்று கூறினார்.
அவர் பதிவிட்ட ட்விட்டில் தெரிவித்ததாவது, "சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில் ஒரு முன்மாதிரியைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் தடுப்பூசி வீணாவதைக் குறைப்பது முக்கியம்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயனின் ட்வீட்டை மேற்கோள் காட்டி பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
Good to see our healthcare workers and nurses set an example in reducing vaccine wastage.
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
Reducing vaccine wastage is important in strengthening the fight against COVID-19. https://t.co/xod0lomGDb
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil