‘’ஆத்தா வந்திருக்கேன் டா முடியாது போ ‘’ - கொரோனா தடுப்பூசி செலுத்த பயந்து திடீரென சாமியாடிய நபர்

By Irumporai Nov 29, 2021 10:47 AM GMT
Report

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னமும் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிர் பிரியும் என நம்பும் அவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன .

‘’ஆத்தா வந்திருக்கேன்  டா  முடியாது  போ ‘’  -  கொரோனா தடுப்பூசி செலுத்த  பயந்து திடீரென சாமியாடிய நபர் | Corona Is A Person Who Is Suddenly Paralyzed

இந்த நிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவக்குழுவினர் சென்றபோது ராமண்ணா என்பவர் திடீரென சாமியாடி அம்மன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என சொல்வதாக கூறி மணி அடித்து சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு நபர் வீட்டின் கூரையில் அமர்ந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.

‘’ஆத்தா வந்திருக்கேன்  டா  முடியாது  போ ‘’  -  கொரோனா தடுப்பூசி செலுத்த  பயந்து திடீரென சாமியாடிய நபர் | Corona Is A Person Who Is Suddenly Paralyzed

தற்போது புதிதாக பரவி வரும் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ்  10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ,இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ள  சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் அப் பகுதி சுகாதரத்துறையினர்.