'அணியினர் அனைவரும் வீடு செல்லும் வரைக் காத்திருந்த கேப்டன்': நெகிழவைத்த தோனியின் செயல்

corona dhoni ipl players last person
By Praveen May 06, 2021 11:22 AM GMT
Report

அணியினர் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு தான் கடைசி ஆளாக தான் வீடு திரும்புவேன் என சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தொடங்கி ஐபிஎல் தொடரானது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் அணிகளில் பங்கேற்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்கே திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் தங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வீடு சென்ற பின்னரே தான் தனது வீட்டிற்கு செல்வேன் என்று அந்த அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

விர்ச்சுவல் மீட்டிங்கில் பேசிய கேப்டன் தோனி,

'இந்தியாவில் ஐபிஎல் நடப்பதால், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு முதலில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் உள்நாட்டு வீரர்கள் அவர்களது வீடு நோக்கி பயணப் படலாம்' என்று கூறியுள்ளார். மேலும் அணியின் அணைத்து வீரர்களும் தங்கள் வீட்டிற்கு சென்றபிறகு தான் கடைசி ஆளாக தான் ஹோட்டலை காலி செய்வேன் எனவும் சென்னை கேப்டன் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தோனியின் இத்தகைய செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.