மீண்டும் இரவு நேர ஊரடங்கு? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

COVID-19
By Thahir Mar 25, 2023 07:08 AM GMT
Report

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஊரடங்கு? 

இந்தியாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது.146 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,590 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் இரவு நேர ஊரடங்கு? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று | Corona Infection On The Rise In India

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.