தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு.. இன்று 22,651 பேருக்குக் கொரோனா தொற்று!
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 22,651 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22,651 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,95,402 பேர் ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,971 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 463 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 33,646 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 19,00,306 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.