இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று
COVID-19
By Thahir
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது.
குறைந்து வரும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,61,899 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,26,730 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,34,99,659 ஆக பதிவாகியுள்ளது. மேலும் குணமடைந்தோரின் விகிதம் என்பது 98.50 ஆக இருந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.