தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
corona
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்.3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
அதே சமயம் இன்று மட்டும் 3 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 35 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது.