இன்று தமிழகத்தில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா .. 102 பேர் உயிரிழப்பு!
corona
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 4,481 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,481 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,84,177 பேர் ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 5,044 பேர் குணமடைந்துள்ளனர்.