கொரோனா வைரஸ் : இந்தியாவில் குறையாத தொற்று பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்புகள் குறையாமல் அதே எண்ணிக்கையில் இருந்து வருகிறது.
கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர்க்கு தொற்று பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை தற்போது 4,42,23,557 ஆக அதிகரித்துள்ளது என்று மற்றகிய சுகாதாரth துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,26,928 ஆக பதிவாகியுள்ளது.
அதே சமயம் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 98.5 பதிவாகியுள்ளது . மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,35,73,094 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.