தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: இன்று 27 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது குறைந்து வருகிறது ,அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா வைரசால் 1,585 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,04,074 பேர் ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,761 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,842 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,50,710 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,50,911 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,12,10,376 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.