தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,61,390 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தமிழகத்தில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,11,837 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,878 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 1,753 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,59,637 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் 17,322 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.